-
இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை
அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும்
மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய்
நடந்துவந்தார்கள்.
-
எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும்
சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
-
எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
-
எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள்.
எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக்
குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
-
அப்படியிருந்தும், அவர்களில்
அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை, ஆதலால் வனாந்தரத்திலே
அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
-
அவர்கள் இச்சித்ததுபோல நாமும்
பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத்
திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
-
ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து
விளையாடவும் எழுந்திருந்தார்களென்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர்
விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.
-
அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில்
இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும்
வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.
-
அவர்களில் சிலர் கிறிஸ்துவைப்
பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும்
கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.
-
அவர்களில் சிலர் முறுமுறுத்து,
சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும்
முறுமுறுக்காதிருங்கள்.
-
இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச்
சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு
எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
-
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று
எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
-
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே
சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள்
திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல்,
சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத்
தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
-
ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே,
விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.
-
உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப்
பேசுகிறேன்: நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.
-
நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம்
கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற
அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?
-
அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும்
பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே
சரீரமுமாயிருக்கிறோம்.
-
மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்;
பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?
-
இப்படியிருக்க, விக்கிரகம் ஒருபொருளென்றும்,
விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான்
சொல்லுகிறேனோ?
-
அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல,
பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே
ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.
-
நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும்
பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய
போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும்
பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.
-
நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா?
அவரிலும் நாம் பலவான்களா?
-
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு
அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க
எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.
-
ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல்,
பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.
-
கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப்
புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும்
விசாரிக்கவேண்டியதில்லை.
-
பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது.
-
அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை
விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால்,
மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற
எதையும் புசியுங்கள்.
-
ஆயினும் இது விக்கிரகங்களுக்குப்
படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி
அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும்
அதின் நிறைவும் கர்த்தருடையது.
-
உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான்
இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே
சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய்
எண்ணப்படவேண்டுவதென்ன?
-
மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே
அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான்
தூஷிக்கப்படுவானேன்?
-
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும்,
எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
-
நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல்,
அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு,
எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல,
-
நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும்,
தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.