
சாதித்தால் சச்சினைப் போல கிரிக்கெட்;டில் சாதிக்க வேண்டும் அன்னை தெராசாவைப் போல சமூகத் தொண்டு செய்ய வேணடும், காமராசரைப் போல தன்னலமற்ற அரசியல் தொண்டு செய்ய வேண்டுமென்று கனவுலகில் மிதக்கும் இளைஞர்கள் கூட்டம் ஏராளமுண்டு. ஆனால் கண்ட கனவை தன் வாழ்நாளில் மெய்யாக்கி மகிழ்ந்த கூட்டம் மிகவும் சொற்பம். செடியில் மலர்கின்ற பூக்கள் எல்லாம் கனியாவதில்லையே! சில பிஞ்சிலே காய்ந்து போய் விடுகின்றதே! இன்னும் சில காயிலே கருகிப் போய் விடுகின்றதே! ஆம் வெகு சிலப் பூக்கள் தான் காற்றை எதிர்கொண்டு மழை நீரை உட்கொண்டு பெய்யும் பனியையும் சகித்து கனியாய் மாறி கண்களை கவர்கின்றன. அது போலவே தன்னுள் கொண்ட எண்ணக் கனவுகளை எத்தனையோ தடைகளைத் தாண்டி நினைவாக்கி நெகிழச் செய்த சச்சின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கம் தான்!



வாலிபர் பகுதி
இளம் வாலிபரின் கேள்விகளும், பெற்றோரின் குமுறல்களும் குறித்த ஒ...
கடைசி காலத்தில் தேவன் எங்கும் எழுப்புதலை க் கொண்டு வர விரும்பு...
நான் கிறிஸ்துவுக்காக வாழ போராடிக் கொண்டிருக்கும் கோடிகளில் ஒ...