| Article Index |
|---|
| பயப்படாதே! மகிழ்ந்து களிகூரு |
| வனாந்திரம் செழிப்பாக மாறும் |
| ஆவியை ஊற்றுவேன் |
| ஜெபம் |
| All Pages |
Page 1 of 4
கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (யோவேல் 2:21)இந்தப் பத்திரிக்கையை வாசிக்கிற நீங்கள் யாராகயிருந்தாலும், உங்களுக்காக நான் ஜெபித்திருக்கிறேன். நீங்களும், உங்கள் குடும்பமும் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட நானும், இயேசு விடுவிக்கிறார் ஜெபக் குழுவினரும் ஜெபித்திருக்கிறோம்.
இப்பத்திரிக்கையை வாசிக்கிற உங்களுக்காக இந்த 2006ம் ஆண்டில், ஆண்டவர் இயேசு வைத்திருக்கும் ஆசீர்வாதத்தை எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்காக தேவ சமூகத்தில் ஜெபித்துக் காத்திருந்தபோது, தேவாதி தேவனிடத்திலிருந்து இந்த வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொண்டேன். இது உங்களுக்கென்று ஆண்டவர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தம் என்று விசுவாசித்து ஜெபித்தால், கட்டாயம் இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வீர்கள். இந்த வேத வசனங்களை கவனமாக வாசியுங்கள். இதற்குள்தான் ஆண்டவர் உங்களுக்கென்று வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் அடங்கி யிருக்கிறது.
“தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங் களைச் செய்வார்... பயப்படாதேயுங்கள்; வனாந்தரத் திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும். ...உங்கள் தேவனாகிய கர்த்த ருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார். களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெ யும் வழிந்தோடும். நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசய மாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிற வரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்து கொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவ தில்லை. அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்று வேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள் மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். யோவேல் 2:2129.
நான்கு விதமான ஆசீர்வாதங்களைக் கர்த்தர் உங்களுக்கு வைத்திருக்கிறார். இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்குத்தான் என்பதை விசுவாசித்து, இந்த ஆசீர்வாதங்களை நீங்கள் சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்.






Comments
RSS feed for comments to this post.